குழந்தை மீது தாக்குதல் – மனைவிக்கு மரண அறிவித்தல் போஸ்டர்! யாழில் அதிர்ச்சிச் சம்பவம்

ஊர்காவற்றுறை – கரம்பொன் பகுதியைச் சேர்ந்த குழந்தையை நபரொருவர் துன்புறுத்தும் காணொலியொன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. எனினும், அது தொடர்பில் தீவிர விசாரணை களை முன்னெடுப்பதில் அதிகாரிகளிடத்தில் அசமந்தப்போக்கே நிலவுவதாகத் சமூக ஆர்வலர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர்.

குறித்த 4 வயதுக் குழந்தை அவரது தாயார் நிறஞ்சினியுடன் (வயது-24) வசித்து வந்துள்ளது. வாய்பேச இயலா தவரான குறித்த இளம்தாய் 3 வருடங்களுக்கு மேல் கணவனைப் பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில், அண்மையில் அவரும் குழந்தையும் குறித்த கணவனால் மீண்டும் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் குறித்த தாயாரின் (நிறஞ்சனியின்) ஒளிப்படம் பொறிக்கப்பட்டு கண்ணீர் அஞ்சலி ஒன்றும் சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ளது. இதையடுத்தே, அந்த இளம் தாயாருக்கு (நிறஞ்சனிக்கு) என்ன நடந்தது என்பதை அறியவும், குழந்தைக்கு இடம்பெறும் சித்திரவதைகளைத் தடுக்கும் முகமாகவும் ஊர்காவற்றுறை பொலிஸாரிடம் சிறுமியின் அம்மம்மா நேற்று முறைப்பாடு ஒன்றைச் செய்துள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் ஊர்காவற்றுறை தலைமை பொலிஸ் நிலைய பொறுப் பதிகாரியைத் தொடர்புகொண்டு கேட்ட பொழுது, ‘இதுவரை அவ்வாறான முறைப்பாடுகள் எதுவும் பதிவு செய்யப் படவில்லை’ என்று தெரிவித்தார். இதனையடுத்து யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபரிடம் தொடர்புகொண்டு கேட்டபொழுது, ‘எம்மிடத்தில் இதுவரை இவ்வாறான சம்பவம் எதுவும் பதிவாக வில்லை’ என்று தெரிவித்தார்.

இதனையடுத்து யாழ். மாவட்டச் செயலரிடம் தொடர்புகொண்டு கேட்டபொழுது, இந்த விடயம் தொடர்பில் எம்மிடம் முறையிடப்பட்டுள்ளது. நல்லூர் பிரதேசத்தில் இந்தச் சம்பவம் இடம்பெறுவதாக அறிய முடிகின்றது. நல்லூர் பிரதேச செயலரைத் தொடர்புகொள்ளுங்கள் என்று தெரிவித்தார்.

இதனையடுத்து நல்லூர் பிரதேச செயலரிடம் தொடர்புகொண்டு கேட்ட பொழுது, ‘பிரதேச செயலகத்தின் சிறுவர் பாது காப்பு உத்தியோகத்தர்மேலதிக விசாரணை களை முன்னெடுத்துள்ளார்’ என்று தெரிவித்தார். எனினும், எந்தவொரு அதிகாரிகளும் குறித்த விடயம் தொடர்பிலோ அல்லது குறித்த குழந்தையின் தற்போதைய நிலை தொடர்பிலோ சரியான தகவலை வழங்கவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *