இலங்கை உள்ளூராட்சி நிறுவகத்தின் வருடாந்த டிப்ளோமா விருது வழங்கும் விழா!

இலங்கை உள்ளூராட்சி நிறுவகத்தின் வருடாந்த டிப்ளோமா விழா நேற்று (08) கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ஜனக வக்கம்புர தலைமையில் நடைபெற்றது.

 உள்ளூராட்சி தொடர்பான உயர்தர டிப்ளோமா கற்கை நெறி மற்றும் உள்ளூராட்சி டிப்ளோமா கற்கை நெறிகளை வெற்றிகரமாக பூர்த்தி செய்த பயிலுனர்களுக்கான டிப்ளோமா சான்றிதழ்கள் அமைச்சரினால் கையளிக்கப்பட்டது.

 உள்ளூராட்சி சபைகளின் உறுப்பினர்களும் மற்றும் அலுவலர்களுக்காக இந்த டிப்ளமோ படிப்புகள் நடத்தப்பட்டதோடு இந்த ஆண்டு பயிற்சி முடித்த 120 பேருக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

 ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் மனிதநேயப் பீடத் தலைவர் பேராசிரியர் ஷிரந்த ஹீன்கெந்த தலைமையுரை ஆற்றியதுடன், நிறுவனத்தின் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான  கலாநிதி சுரதிஸ்ஸ திஸாநாயக்க மற்றும் இலங்கை தகவல் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் கலாநிதி உபக ரத்நாயக்க ஆகியோரும் நிகழ்வில்  கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *