மயக்கடைந்த பெண்ணின் நகைகளை எடுத்துக்கொண்டு தப்பி ஓடிய திருடர்கள்

காணாமமஹரகமவில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றுக்குள் கூரிய ஆயுதங்களுடன்   நுழைந்த நால்வர், அதன்  உரிமையாளரான பெண்ணைத் தாக்கி அவர் அணிந்திருந்த தங்க நகையையும் பணத்தையும்  கொள்ளையிடடுச் சென்றுள்ளதாக மஹரகம பொலிஸார் தெரிவித்தனர்.

கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்ட பெண் காயமடைந்து வர்த்தக நிலையத்துக்குள்  மயங்கி வீழ்ந்து  கிடந்த நிலையில் அவர் அணிந்திருந்த தங்க நகைகள் மற்றும் உடைமைகளைக் கொள்ளையிட்டுச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கொள்ளையர்கள் தாங்கள் வந்த முச்சக்கரவண்டியின் இலக்கம் மற்றும் நிறம் குறித்து பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர்களைக் கைது செய்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *