
இலங்கையின் தென்கிழக்கு நோக்கிய குறைந்த மட்ட வளிமண்டல குழப்பமானது மேலும் வளர்ச்சியடையும் என எதிர்பார்க்கப்படுவதால், நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் நிலவும் மழைவீழ்ச்சி மேலும் அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, கிழக்கு, ஊவா, வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் மாத்தளை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை பெய்யும்.
அத்துடன், பிற இடங்களில் பிற்பகல் அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.
கிழக்கு, ஊவா, சப்ரகமுவ, மத்திய மற்றும் தென் மாகாணங்களில் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழையை எதிர்பார்க்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.