டீசல் மற்றும் மண்ணெண்ணெய் மூலம் மேலும் நஷ்டம் !

<!–

டீசல் மற்றும் மண்ணெண்ணெய் மூலம் மேலும் நஷ்டம் ! – Athavan News

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தொடர்ந்தும் நட்டத்தைச் சந்தித்து வருவதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சர் இன்று புதன்கிழமை நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

டீசல் லீற்றருக்கு 12 ரூபாயும் மண்ணெண்ணெய் லீற்றருக்கு 22 ரூபாயும் நஷ்டம் ஏற்படுவதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சர் டி.வி.சானக்க குறிப்பிட்டார்.

இம்முறை எரிபொருள் விலை திருத்தம் செய்யப்படாமை தொடர்பில் ஹேஷா விதானகே எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *