
பிலிப்பைன்ஸ் கடலில் மீட்கப்பட்ட சட்டவிரோத புகழிடக கோரிக்கையாளர்கள் தங்களை இலங்கைக்கு அனுப்ப வேண்டாம் என்று புலம்புவதாக தெரிவிக்கப்படுகிறது.
மீட்கப்பட்ட புகழிட கோரிக்கையாளர்களை நாட்டுக்கு கொண்டு வர முயற்சி எடுக்கப்படும் என கடற்தொழில் மற்றும் நீரியல் வளத்துறை துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் வியட்நாமில் உள்ள அகதிகள், தங்களை இலங்கைக்கு திருப்பி அனுப்ப வேண்டாம் என்று கூறுவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
இலங்கையில் தங்களது வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் வாழ முடியாத சூழல் உள்ளது. எனவே எங்களை அங்கு திருப்பி அனுப்ப வேண்டாம் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.