
அமைச்சு பதவி வழங்கப்பட்டால் அதனை பொறுப்பேற்பதற்கு தயாராகவே இருக்கின்றேன். – என்று மொட்டு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்தார்.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது அவர் இவ்வாறு கூறினார்.
அத்துடன், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவே ஆட்சியை தீர்மானிக்கும் சக்தி எனவும் மார்தட்டினார்.