303 இலங்கையர்களையும் ஐ.நாவிடம் பாரப்படுத்த வேண்டும்! கூட்டமைப்பு கோரிக்கை

வியட்நாம் கடற்பரப்பில் தத்தளித்துக்கொண்டிருந்த நிலையில் காப்பாற்றப்பட்ட 303 இலங்கையர்களையும் ஐக்கிய நாடுகள் சபையிடம் பாரப்படுத்த ஜனாதிபதி இணங்க வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பு கோரியுள்ளது.

குறித்த 303 பேரையும் ஐக்கிய நாடுகள் சபையிடம் பாரப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படுமாயின் அதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பரிந்துரை செய்ய வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் நிர்மலநாதன் இன்று நாடாளுமன்றில் கோரிக்கை விடுத்தார்.

இந்த 303 பேரில் 264 ஆண்களும் 19 பெண்களும், 20 சிறுவர்களும் அடங்குவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

எனவே, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நினைத்தால் அவர்களை ஐக்கிய நாடுகள் அமைப்பிடம் பொறுப்பளிக்க முடியும் என்று நிர்மலநாதன் குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *