வாக்குறுதி அரசியலை சட்டத்தினால் ஒழிக்கப்பட வேண்டும் – உதய கம்மன்பில

தற்போதைய அரசாங்கம் எப்பொழுதும் கடனில் மூழ்கியுள்ள போதிலும் அடுத்த தேர்தலுக்கான வாக்குறுதி அரசியலை மீண்டும் ஆரம்பித்துள்ளதாக உதய கம்மன்பில தெரிவித்தார்.

புதிய சட்டத்தை அல்லது வாக்குறுதி வழங்கும் அரசியல் கலாசாரம் அகற்றப்படாவிடின், அடுத்த தேர்தலில் வெற்றிபெற அரசியல்வாதிகள் அடுத்த தலைமுறையை அடகு வைப்பார்கள் என்றார்.

பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைமையகத்தில் இன்று (9) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இலவச மதிய உணவு, மாவட்டம் தோறும் பல்கலைக்கழகம், வெளிநாட்டில் படிக்கும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை போன்ற வாக்குறுதிகள் அதில் அடங்கும் என கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *