அம்பாறையில் கன மழை – பாலத்துக்கு மேலால் பாயும் வெள்ளம்

அம்பாறை மாவட்டத்தில் தற்போது பெய்து வரும் அடை மழை காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

கல்முனை – சவளக்கடை ஊடான கிட்டங்கி பாலத்திற்கு மேலால்  வெள்ளநீர்  பெருக்கெடுக்க ஆரம்பித்துள்ளது. இதனால்  பொதுமக்களின் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

மத்திய முகாம், சவளக்கடை, நாவிதன்வெளி, அன்னமலை மற்றும்  சொறிக்கல்முனை போன்ற பிரதேச பொதுமக்கள் பொக்குவரத்து செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதேவேளை மாவட்டத்தின் கரையோர தாழ்நிலப் பிரதேசங்ககள், வயல் நிலங்கள் போன்றவற்றிலும் வெள்ள நீரால் நிரம்பிவருகின்றன. இதனால் பொதுமக்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *