கொழும்பு,நவ 09
இலங்கைக்கான இங்கிலாந்து வர்த்தகத் தூதுவர் லோர்ட் டேவிஸ் பிரபு அபர்சோக் மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ளார்.
வர்த்தக வாய்ப்புகளை விரிவுபடுத்தும் நோக்கில் லோர்ட் டேவிஸ் பல்வேறு வர்த்தக மற்றும் அரசாங்க பங்குதாரர்களை சந்திப்பார் என இலங்கையில் உள்ள இங்கிலாந்து உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
லோர்ட் டேவிஸ் இங்கிலாந்து-இலங்கை பொருளாதார கூட்டுறவின் பரஸ்பர வளர்ச்சியை ஆதரிப்பதிலும் கவனம் செலுத்தவுள்ளார்.
2020 ஆம் ஆண்டு இலங்கைக்கான புதிய பிரதமரின் வர்த்தக தூதராக அபர்சோக் பிரபு டேவிஸ் என்பவரை முன்னாள் இங்கிலாந்து பிரதமர் பொரிஸ் ஜோன்சன் நியமித்தார்.
இலங்கை மற்றும் இங்கிலாந்து பங்குதாரர்களுக்கான உயர்மட்ட அணுகல் மூலம் இங்கிலாந்தின் வர்த்தக மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு நோக்கங்களை லோர்ட் டேவிஸ் ஆதரிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது, இரு நாடுகளுக்கும் நன்மைகளை கொண்டு வரும் ஒப்பந்தங்களை ஊக்குவிப்பதற்காக இங்கிலாந்து வணிகங்களுக்கு கதவுகளைத் திறக்கிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.