அரசாங்கத்தில் அடக்குமுறைகளுக்கு எதிராக நீர்கொழும்பில் ஆர்ப்பாட்டம்!

அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பு மற்றும் அடக்குமுறைகளுக்கு எதிரான தேசிய எதிர்ப்புக்கு இணைவாக இன்று 9ஆம் திகதி மாலை 5 மணி அளவில் நீர்கொழும்பு தெல்வத்தை சந்தியில் அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம்  நடைபெற்றது.

வசந்த முதலிகே மற்றும் ஸ்ரீ தம்ம  தேரர் ஆகியோரை விடுதலை செய்யுமாறு  வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டக்காரர்கள் இதன்போது குரல் எழுப்பினர். அத்துடன் அதிகரித்து செல்லும் வாழ்க்கை செலவு தொடர்பாகவும் அவர்கள் கோஷங்களை எழுப்பினர். ரணில் அரசாங்கம் வீடு செல்ல வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.

சபை இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தியது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் சுலோக அட்டைகளை ஏந்தி இருந்ததோடு எதிர்ப்பு கோஷங்களையும் எழுப்பினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *