காரைநகர் – ஊரியில் கோடாவுடன் இருவர் கைது!

ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காரைநகர் ஊரி பகுதியில், கசிப்பு காய்ச்சுவதற்கு பயன்படுத்தும் கோடாவுடன் 56 வயதுப் பெண் ஒருவரும் 20 வயது ஆண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்றையதினம் (08), ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தின் கண்காணிப்பின் கீழ் இயங்கும் களபூமி பொலிஸ் காவலரண் பொலிஸாரினால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது கைது செய்யப்பட்ட இளைஞனிடம் இருந்து 7500 மில்லிமீட்டர் கோடாவும், 56 வயதுப் பெண்ணிடமிருந்து 1500 மில்லிமீட்டர் கோடாவும் கைப்பற்றப்பட்டது.

கைது செய்யப்பட்ட குறித்த இளைஞனுக்கு சிறுவர் நீதிமன்றத்தில் திறந்த பிடியாணை ஒன்று உள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அவர்கள் இருவரையும் இன்றையதினம் நீதிமன்றத்தில் முற்படுத்தியவேளை, அவர்களை பிணையில் செல்வதற்கு நீதிவான் அனுமதியளித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *