விடுதலைப் புலிகளின் பொருட்களை தேடி அகழ்வு பணியில் பொலிஸார் !

விடுதலை புலிகளால் புதைத்து வைக்கப்பட்ட நகைகள் அல்லது ஆயுதங்கள் இருக்கலாம் என அடையாளப்படுத்தபட்டுள்ள முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு தேவிபுரம் பகுதியில் உள்ள வீட்டு காணி ஒன்றில் அகழ்வு பணி ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

அதாவது, குறித்த பகுதியில் விடுதலை புலிகளால் பொருட்கள் புதைத்து வைக்கப்பட்டிருப்பதாக புதுக்குடியிருப்பு பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து, முல்லைத்தீவு நீதிமன்றத்தில் அனுமதி பெற்று முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜா முன்னிலையில் இன்றைய தினம் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டது.

குறித்த அகழ்வு நடவடிக்கை புதுக்குடியிருப்பு பொலிஸார், விசேட அதிரடிப் படையினர், கிராம அலுவலர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் பங்களிப்போடு இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *