வடக்கு மாகாணத்தில் போதைப் பொருள் பாவனை அச்சமூட்டும் வகையில் அதிகரித்துள்ள நிலையில், குறித்த போதைப் பொருட்கள் கடத்தலில் மீனவர்கள் சம்மந்தப்படாமல் இருப்பது உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
இதன்மூலமே போதைப் பொருள் கடத்தலை தடுக்க முடியும் எனவும் நாகவிகாரை விகாராதிபதி தெரிவித்துள்ளார்.
வடக்கில் கடலட்டைப் பண்ணைகள் அமைக்கப்பட்டு வருகின்றமையை தடுத்து நிறுத்துவதற்கான கோரிக்கையை முன்வைப்பதற்காக விகாராதிபதியை சந்தித்த யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் சமாசத்தின் தலைவர் உட்பட்ட குழுவினரிடமே குறித்த ஆலோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.