எகிப்தில் இருந்து நாடு திரும்பினார் ஜனாதிபதி

எகிப்தில் நடைபெற்ற காலநிலை மாற்றம் தொடர்பான மாநாட்டை முடித்துக்கொண்டு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாடு திரும்பியுள்ளார்.

ஜனாதிபதி இன்று (வியாழக்கிழமை) காலை எகிப்தில் இருந்து கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தார்.

இந்த மாநாட்டின் போது ஜனாதிபதி சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் கிறிஸ்டலினா ஜோர்ஜிவாவையும் சந்தித்தார்.

இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியத்தின் பூரண ஆதரவை வழங்குவது தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டதுடன், கானாவின் நிதி அமைச்சர் மற்றும் மாலைதீவு சபாநாயகர் ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இதேநேரம் இந்த பயணத்தில் பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் மற்றும் கொரிய குடியரசின் தூதுக்குழுவின் தலைவர் உள்ளிட்டவர்களையும் ஜனாதிபதி சந்தித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *