வீட்டில் முதியவர்கள் இருந்தால் ஆபத்து – யாழில் அதிர்ச்சிச் சம்பவம்

கோப்பாய், பலாணை கண்ணகி அம்மன் ஆலயத்துக்கு அருகிலுள்ள வயோதிபர்களின் வீடொன்றுக்குள் நுழைந்த இருவர் அங் கிருந்தவர்களை அச்சுறுத்தி சங்கிலியை அபகரித்துச் சென்றுள்ளனர்.

இந்தச் சம்பவம் நேற்றுமுன்தினம் நடந்துள்ளது. வீட்டில் வயோதிப் பெண் ஒருவர் தனித்திருந்த நிலையில், வீட்டுக்குள் நுழைந்த இருவர் அவரை அச்சுறுத்திக் கொள்ளையிட்டுள்ளனர்.

கொள்ளையிட்டவர்களை வீட்டில் இருந்த பெண் அடையாளம் காட்டியுள்ளார் என்றும், அந்த வீட்டில் வேலை செய்யும் பெண்ணின் உறவினரே கொள்ளையில் ஈடுபட்டவர் என்றும் கூறப்படுகின்றது.

இரு வாரங்களுக்கு முன்னரும் அந்தப் பகுதியிலுள்ள வீடொன்றுக்குள் நுழைந்தவர்கள் அங்கிருந்த வயோதிபப் பெண்ணை அச்சுறுத்தி சங்கிலியை அபகரித்துச் சென்றுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.

வயோதிபர்கள் தனித்திருக்கும் வீடு களுக்கு வேலைக்குச் செல்லும் பெண்கள், வீட்டுத் தகவல்களைத் தெரிவித்து. அவர்களின் உறவினர்கள் கொள்ளையிடும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன என்று அந்தப் பகுதி மக்கள் குற்றஞ்சாட்டு கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *