
லிட்ரோ மற்றும் லாப்ஸ் எரிவாயு நிறுவனங்கள், உள்நாட்டு எரிவாயு சிலிண்டர்களைத் தட்டுப்பாடின்றி விநியோகிக்கும் என்று இரு நிறுவனங்களின் உயர் அதி காரிகள் அறிவித்துள்ளனர்.
அதன்படி, ஏதேனும் ஒரு பகுதியில் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டால் நிறுவனத்துக்கு தெரிவிக்குமாறு லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் உயர் அதிகாரி தெரிவித்துள்ளார்.
எனினும் கடந்த சில நாள்களாக லிட்ரோ மற்றும் லாப்ஸ் எரிவாயுக்களுக்கு கடும் தட்டுபாடு ஏற்பட்டுள்ளது என்று மக்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.