
இன்றைய சபை அமர்வில் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவிக்கையில்:
நான் சபையில் இல்லாத நேரத்தில்,எனது சிறப்புரிமையை மீறும் வகையில் சுமந்திரன் எம்.பி செயற்பட்டுள்ளார்.முன்னர் 600 பொலிஸார் கொல்லப்பட்டமைக்கு நான் காரணம் என்று கூறியுள்ளார்.நான் எந்தக் குற்றமும் செய்யவில்லை என நீதி மன்றம் என்னை விடுவித்துள்ளது.ஆகவே இவர் ஒரு சட்டத்தரணியாக இருந்தும் எனது அரசியல் செல்வாக்கை சரிப்பதற்காக இவ்வாறு பொய் பரப்பி வருகின்றார்.நான் மக்களுக்கு சேவை செய்யவே போராடி அரசியலுக்கு வந்தேன் என்றார்.