
பொது தகவல் தொழில்நுட்ப பரீட்சைக்கு பாடசாலை மற்றும் தனியார் பரீட்சார்த்திகள் விண்ணப்பிக்கும் காலம் நீடிக்கப்பட்டுள்ளது எனப் பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது.
அதன்படி நவம்பர் 25 ஆம் திகதி வரை கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது.
2019, 2020, 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் தரம் 12 இல் கல்வி பயின்ற மாணவர்களே இந்தப் பரீட்சைக்கு விண்ணப்பிக்க முடியும்.
அனைத்து விண்ணப்பங்களும் கல்வி கற்ற பாடசாலையின் அதிபர்களே சமர்ப்பிக்க முடியும். ண்ணப்பதாரர்கள் தனிப்பட்ட விதத்தில் இந்தப் பரீட்சைக்கு தோற்ற முடியாது
2022 (2023) உயர்தரப் பரீட்சை நடைபெறும் காலத்தில் இந்தத் பரீட்சை நடத்தப்படமாட்டாது. பரீட்சைக்கான திகதி பின்னர் அறிவிக்கப்படும் எனப் பரீட்சை திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.