யாழில் நிலவும் காலநிலை மாற்றம் தொடர்பில் விசேட கலந்துரையாடல்!

யாழில் இன்றைய தினம் அனர்த்த முகாமைத்துவம் தொடர்பிலான கலந்துரையாடல் நிகழ்வு இடம்பெற்றிருந்தது.

இந்நிகழ்வானது யாழ்.மாவட்ட செயலகத்தில் இன்று காலை யாழ்.மாவட்ட அரச அதிபர் தலைமையில் இடம்பெற்றது.

இதில் தற்போது மழை காலத்தில் ஏற்படுகின்ற வெள்ள நிலைமைகளில் இருந்து மக்களை பாதுகாப்பதற்குரிய நடவடிக்கைககளை துரிதமாக எடுப்பதற்கு பிரதேச மட்ட இடர்க்குழு  கூட்டங்கள் ஊடாக நடவடிக்கைகளை எடுப்பதற்கு சில தீர்மானங்களை எடுக்கப்பட்டுள்ளன.

இடர்கால நிலைமை ஏற்பட்டால் எவ்வாறு சமாளிப்பது? பாதுகாப்பான இடங்களுக்கு மக்களை எவ்வாறு அகற்றுவது?,எதிர்காலத்தில் அவ்வாறான நிலைமைகள் ஏற்பட்டால் அதற்கான நிவாரண பணிகளை துரிதமாக மேற்கொள்வது ,அதற்கான வளங்களை பெற்றுக்கொள்வது போன்ற விடயங்களும் கலந்துரையப்பட்டன.

மேலும் இந்நிகழ்வில் கடற்படை ,பொலிஸ் அதிகாரிகள் ,யாழ்.மாவட்ட தவிசாளர்கள் எனப்பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *