ரணிலுடன் இணையும் கஜேந்திரகுமார் அணி – பாராளுமன்றில் ரணில் அறிவிப்பு

வடக்கு மாகாணத்தில் பல்வேறு அபிவிருத்தி பணிகளை ஆரம்பிக்கவுள்ளோம்.பசுமை தொடர்பான வேலைத்திட்டங்களை ஆரம்பிக்கவுள்ளோம்.ஏற்கனவே கைதிகள் தொடர்பில் ,அவர்களின் விடுதலை தொடர்பில் நடவடிக்கை எடுத்து வருகின்றோம்.தற்போது சிறையில் உள்ள எழுத்தளார் தொடர்பில் வழக்கு நடைபெறுகிறது.நீதி மன்ற தீர்ப்பின் அடிப்படையில் அவரின் விடுதலை அமையும்.

அதே போன்று காணாமல் போனோர் விடயங்களையும் ஆராய்கின்றோம்.அடுத்த வாரம் இது பற்றி தமிழ் தரப்புடன் கதைக்கவுள்ளோம்.இதற்கு குழப்பம் இல்லாமல் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் தலைமையிலான அணியினர் எமக்கு ஆதரவு வழங்குவார்கள் என்று நம்புகின்றோம்.அதேபோன்று கிழக்கிலும் நாம் பல வேலைத் திட்டங்களை ஆரம்பிக்கவுள்ளோம்.திருகோணமலையை சிறந்த சுற்றுலா தலமாக மாற்றுவோம்.எமது பிரைச்சினைகளை நாமே தீர்ப்போம் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *