அமெரிக்க தூதுவர் கிழக்கு ஆளுநர் திடீர் சந்திப்பு!

சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து கடனைப் பெறுவதற்கு தேவையான கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்கு உடனடியாக ஆதரவளிப்பதாக அமெரிக்க தூதுவர் ஜூலி ஜே சான் கிழக்கு மாகாண ஆளுநர் திருமதி அனுராதா யஹம்பட்டிடம் தெரிவித்தார்.

தூதுவர் அனுராதா யஹம்பத்தை நேற்று (08) பிற்பகல் மட்டக்களப்பில் உள்ள ஆளுநரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் சந்தித்தார்.

இலங்கைக்கான தூதுவராக பதவியேற்ற பின்னர் கிழக்கு மாகாணத்திற்கு விஜயம் செய்வது இதுவே முதல் தடவையாகும்.

இதேவேளை, விவசாய திணைக்களத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் கால்நடை ஊக்குவிப்பு வேலைத்திட்டம் கிழக்கு மாகாணத்தில் உள்ள பாற்பண்ணையாளர்களுக்கு தேவையான ஆதரவை வழங்கும் என தூதுவர் தெரிவித்தார்.

அதுமட்டுமல்லாமல், சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்குத் தேவையான ஆதரவை வழங்குவதாகத் தெரிவித்த தூதுவர், நாட்டில் முறையான உள்நாட்டு விமானச் சேவையை விரைவில் ஏற்படுத்துவதற்கு உதவுமாறும் தூதுவர் கேட்டுக் கொண்டார்.

அவ்வாறு நடந்தால் கிழக்கு மாகாணத்தையும் சுற்றுலாப் பயணிகளை இலகுவாக ஈர்க்க முடியும் என தூதுவர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *