
எதிர்ப்புகளை விட நாட்டிற்கு இன்று தேவை தீர்வு மட்டுமே! – பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க..
எப்பொழுதும் முதுகை நிமிர்த்தி நாட்டுக்கு தீர்வுகளை முன்வைத்து அந்த தீர்வுகளை அமுல்படுத்த அர்ப்பணிப்புடன் செயற்படும் ஒரு குழுவினர் தாங்கள் என 43வது படையணியின் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க கருத்து தெரிவித்தார்…
இன்றைய தினம் கொழும்பில் உள்ள துருக்கிய தூதரகத்தில் துருக்கிய தூதுவருடனான கலந்துரையாடலின் பின்னர் ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதிலளித்த பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க மேலும் கருத்து தெரிவிக்கையில்;
” 43ம் படையணி என்ற ரீதியில் துருக்கிய தூதருடன் நாங்கள் விவாதித்தோம். துருக்கி ஐரோப்பாவிற்கும் ஆசியாவிற்கும் இடையே ஒரு வரலாற்று பிரசித்தி பெற்ற நாடு. ஒரு காலத்தில் சக்திவாய்ந்த ஒட்டோமான் பேரரசாக திகழ்ந்தது. இப்போது இந்த உக்ரைன் பிரச்சினையில் மிக முக்கியமான அரசியல் மற்றும் பொருளாதார பாத்திரத்தை வகிக்கிறது. என்றார்… மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்…
“இலங்கைக்கு புதிய நண்பர்களை கண்டுபிடிக்க வேண்டும். 9 வருடங்களுக்கு முன்னர் இங்கு தூதரகம் ஸ்தாபிக்கப்பட்டது. எம்மால் பல வேலைகளை செய்யக்கூடிய நாடு இது. இது தொடர்பாக தூதரகத்துடனும் அந்த நாட்டுடனும் கருத்துக்களை பரிமாறிக்கொண்டோம்.” என்று குறிப்பிட்டார்.