ராணுவ வீரர்கள் சேவையில் இருந்து சட்டப்பூர்வமாக விலக பொது மன்னிப்புக் காலம் அறிவிப்பு

கொழும்பு,நவ 10

விடுமுறையில் அன்றி சேவைக்கு சமூகமளிக்காமல் வெளிநாடுகளில் உள்ள இராணுவ உறுப்பினர்களுக்கு சட்டப்பூர்வமாக சேவையில் இருந்து விலகுவதற்கான பொது மன்னிப்புக் காலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் டிசம்பர் 31 ஆம் திகதி வரை இதற்கான பொது மன்னிப்புக் காலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வருடம் ஒக்டோபர் மாதம் 25 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னரான காலப்பகுதியில் சேவைக்கு சமூகமளிக்காத இராணுவ வீரர்களுக்காக மாத்திரம் இந்த பொது மன்னிப்புக் காலம் வழங்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டிற்கு செல்லவில்லை என்ற விடயத்தையோ அல்லது கடவுச்சீட்டு மற்றும் பிற ஆவணங்கள் மோசடியாக தயாரிக்கப்படவில்லை என்பதையோ குடிவரவு, குடியகல்வு திணைக்களம் உறுதிப்படுத்த வேண்டும் எனவும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *