இந்நாட்டு விஞ்ஞானிகள் தங்கள் ஆராய்ச்சிகளை வெளிநாடுகளில் பகிர்ந்து கொள்ளும் நிலை உடனடியாக மாற வேண்டும் . அந்த அறிவையும் புதுமையையும் தாய் நாடு பெற வேண்டும். சரியான பரிசோதனை கூடங்கள், ஆய்வகங்கள் போன்ற உரிய வசதிகள் இல்லாததால், இந்நாட்டில் பிறந்த விஞ்ஞானிகள், தங்கள் ஆராய்ச்சியையும், அறிவையும் வெளிநாடுகளுக்குக் கொடுத்து வந்துள்ளார்கள். அந்த விஞ்ஞானிகளுக்கும் இந்த நாட்டிலுள்ள விஞ்ஞானிகளுக்கும் இடையிலான ஒரு சிறப்பான ஒருங்கிணைப்பின் மூலம் அறிவு, புதுமைகள் போன்றவற்றை பெற, தாய் நாட்டின் முயற்சியே இன்று உருவாகியுள்ளது என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.
கல்வி அமைச்சில் இன்று இடம்பெற்ற தேசிய விஞ்ஞான தின நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
உண்மையான இளைஞர் போராளிகளின் உண்மையான விருப்பம் அரசியல்வாதிகளின் மாற்றம் மாத்திரமல்ல, தற்போதுள்ள அமைப்பில் முழுமையான கட்டமைப்பு மாற்றமாகும்.
இந்த உண்மையான மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய மாற்றம் பாடசாலை முறை, பல்கலைக்கழகங்கள், புத்தாக்கங்கள் உட்பட அனைத்து துறைகளிலும் ஏற்பட வேண்டும் எனவும் அமைச்சர் இங்கு குறிப்பிட்டார்.
அமைச்சர் தலைமையில் கல்வி அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் ‘அறிவியல் மின் செய்தி’ இணையத்தளம் அறிமுகம் செய்யப்பட்டதுடன் பாடசாலை விஞ்ஞான கழக வலையமைப்பை வலுவாகவும் விரிவுபடுத்தும் வகையில் அறிவியலை பாடசாலைக்கு நெருக்கமாக கொண்டு செல்லும் வேலைத்திட்டமும் ஆரம்பிக்கப்பட்டது.
தேசிய அறிவியல் அறக்கட்டளையின் 50 வது ஆண்டு சிறப்பிதழ் ஒன்றும் வெளியிடப்பட்டதோடு தேசிய அறிவியல் அறக்கட்டளை நடத்திய பாடசாலைகளுக்கிடையிலான போட்டிகளில் வெற்றி பெற்றவர்களும் இங்கு மதிப்பீடு செய்யப்பட்டனர்.
இந்த நிகழ்ச்சியில், அறிவியல் திறனின் அடிப்படையில் ஐந்து சிறந்த பாடசாலைகள் தேர்வு செய்யப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு ‘ஃபைவ் ஸ்டார்’ விருதும், அறிவியலை பிரபலப்படுத்திய ஆசிரியர்களுக்கு தேசிய அறிவியல் அறக்கட்டளை யவ-ஜீவ சிறப்பு விருதும் வழங்கப்பட்டது.
அத்துடன் அசோகா டி சில்வா, துசித மலலசேகர ஆகியோருக்கு இரண்டு வாழ்நாள் சாதனையாளர் விருதுகள் வழங்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.