யாழ், தெல்லிப்பழை மகாஐனக் கல்லூரியின் மாணவர் பாராளுமன்ற கன்னி அமர்வும் அமைச்சர்கள் பதவியேற்பும் இன்று நடைபெற்றது.

யாழ் மகாஜனக் கல்லூரியின் மாணவர் பாராளுமன்ற அமர்வும் அமைச்சர்கள் பதவியேற்பு நிகழ்வு சபாநாயகர் மோகனா சதானந்தநாதன் தலமையில் இன்று நடைபெற்றது

இந்நகிழ்வில் பாடசாலை அதிபர் மணி சேகரன் வலிகாமம் கல்வி வலய அதிகாரிகள் பாடசாலையின் ஆசிரியர்கள் மாணவர்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்
இதன்போது 10 அமைச்சர்கள் 10 பிரதியமைச்சர்கள் சத்திய பிரமாணம் செய்து கொண்டதோடு சபை உறுப்பினர்களும் சத்திய பிரமாணம் செய்து கொண்டனர்

இதன்போது மாணவ பாராளுமன்றத்தின் அமைச்சர்கள் பிரதி அமைச்சர்கள் தமது அமைச்சரவை சார்பாக விடயங்களை அடங்கிய கருத்தை வெளியிட்டனர்.

இளைஞர் சமுதாயத்தை பாராளுமன்ற பிரதிநிதித்துவப்படுத்துவதற்கு காணப்படும் குறைபாடுகளை நீக்கும் முகமாக எதிர்வரும் காலங்களில் இளைஞர் சமுதாயத்தை பாராளுமன்றத்திற்கு பிரதிநிதித்துவப்படுத்தும் நோக்கிலேயே பாராளுமன்ற அமர்வு முறை பாடசாலைகளில் உருவாக்கப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது