சுவிஸ் – கொழும்புக்கு இடையில் புதிய விமான சேவை ஆரம்பம்!

சுவிஸர்லாந்தில் இருந்து புதிய விமான சேவையின் விமானம் ஒன்று சேவைகளை ஆரம்பித்துள்ளதுடன், முதலாவது பயணமாக குறித்த  விமான சேவையின் விமானம் இன்றைய தினம்  மதியம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

சுவிஸர்லாந்தின் சூரிச் சர்வதேச விமான நிலையத்திற்கும், கட்டுநாயக்க விமான நிலையத்திற்கும் இடையில் குறித்த விமான சேவை நிறுவனம் நேரடியாக விமான போக்குவரத்தை நடத்தவுள்ளது.

ஈடெல்வைஸ்  விமான சேவை நிறுவனத்தின் 068 என்ற விமானம் இன்றைய தினம் மதியம் 12.20மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது. கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த குறித்த  விமானத்தில் 125 பயணிகளும், 15 விமான பணியாளர்களும்,  இலங்கை வந்துள்ளனர்.

இவர்களை வரவேற்பதற்காக இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியகத்தின் அதிகாரிகள் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சென் விமானத்தில் வந்த பயணிகளுக்கு உற்சாகமான வரவேற்பு வழங்கப்பட்டது. ஈடெல்வைஸ் விமான சேவை வாரத்தில் ஒருமுறை கட்டுநாயக்கவுக்கும் சூரிச்சுக்கும் இடையில் நேரடி விமான சேவையை நடத்தும் என அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *