கொழும்பு,நவ 09
மோட்டார் போக்குவரத்து திணைக்களம் பொலிஸாருடன் இணைந்து இன்று (10) விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையொன்றை மேற்கொண்டிருந்தது.
அதிக புகை வெளியேற்றும் வாகனங்களை அடையாளம் காணும் வகையில் குறித்த சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருந்தது.
கண்டி – கொழும்பு பிரதான வீதியின் கடவத்த நகரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது, அதிக புகையை வெளியேற்றும் சுமார் 20 வாகனங்கள் அடையாளம் காணப்பட்டதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.