திருகோணமலையில், அரச சேவை மக்களுக்காக அபிவிருத்தி செயற்திட்டம்!

திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலகத்திற்கு திங்கள் மற்றும் புதன் கிழமைகளில் சேவைகளை பெறுவதற்காக நூற்றுக்கணக்கான பொதுமக்கள் வருவதுடன் அவர்களுக்கான சேவைகள் கிரமமான முறையில் வழங்குவதற்கான ஏற்பாடுகளை பிரதேச செயலாளர் பி. தனேஸ்வரன் தலைமையிலான பணிக்குழாத்தினர் நடைமுறைப்படுத்தி வருகின்றனர்.

அவ்வகையில் குறித்த தினங்களில் பிரதேச செயலாளர் தம் பிரத்தியேக அலுவலக அறையிலிருந்து கீழிரங்கி பிரதேச செயலக கட்டிடத்தின் நுழைவாயில் அருகே வருகை தந்து மக்களுக்கான சேவைகளை வழங்கி வருவதனை அவதானிக்க கூடியதாக உள்ளது. மக்களது பிரச்சினைகள், தேவைகள் இனங்காணப்பட்டு உரிய உத்தியோகத்தர் குழாமிடம் அவர்கள் சேவை பெறலிற்கு அனுப்பப்படுகின்றனர்.

சேவை பெற வரும் மக்கள் அமர்வதற்காக பிரத்தியேக இருக்கை வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

மக்களுக்கான சேவைகளை சிரமமின்றி குறுகிய நேரத்தினுள் வழங்கும் வகையில் இவ்விசேட ஒழுங்குகள் குறித்த தினங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பிரதேச செயலாளர் தெரிவித்தார்.

மக்களுக்கான சேவைகளை அவர்களது காலடியை நோக்கி விரிவுபடுத்தல் இதன்மூலம் எதிர்பார்க்கப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *