பிலிப்பைன்சின் தெற்கு பசிலான் மாகாணத்தில் உள்ள புகான் நகரில் அந்த நாட்டு ராணுவத்துக்கும், உள்ளூர் கிளர்ச்சிப் படைக்கும் இடையே கடுமையான துப்பாக்கி சண்டை நடந்தது.
இதில் 3 ராணுவ வீரர்களும், கிளர்ச்சிப் படையை சேர்ந்த 4 பேரும் உயிரிழந்தனர்.
சுமார் 10-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர்.
இந்த தாக்குதலில் கிளர்ச்சிப் படையைச் சேர்ந்த மேலும் பலர் படுகாயம் அடைந்திருக்கலாம் என பிலிப்பைன்ஸ் ராணுவம் தெரிவித்துள்ளது.