பிலிப்பைன்சில் ராணுவம் மற்றும் கிளர்ச்சிப் படை இடையே துப்பாக்கிச் சண்டை – 7 பேர் பலி!

பிலிப்பைன்சின் தெற்கு பசிலான் மாகாணத்தில் உள்ள புகான் நகரில் அந்த நாட்டு ராணுவத்துக்கும், உள்ளூர் கிளர்ச்சிப் படைக்கும் இடையே கடுமையான துப்பாக்கி சண்டை நடந்தது.

இதில் 3 ராணுவ வீரர்களும், கிளர்ச்சிப் படையை சேர்ந்த 4 பேரும் உயிரிழந்தனர்.

சுமார் 10-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர்.

இந்த தாக்குதலில் கிளர்ச்சிப் படையைச் சேர்ந்த மேலும் பலர் படுகாயம் அடைந்திருக்கலாம் என பிலிப்பைன்ஸ் ராணுவம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *