ஆட்ட நிர்ணய சதி – சர்வதேச கிரிக்கெட் பேரவையை நாடும் நளின்!

ஆட்ட நிர்ணய சதி தொடர்பில், நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார சர்வதேச கிரிக்கட் பேரவையில் முறைப்பாடளிக்கவுள்ளார்.

அண்மையில் காலியில் இடம்பெற்ற பாகிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் போது, களத்தை சாதகமாக பயன்படுத்தியதாக கூறி அவர் இந்த முறைப்பாட்டை வழங்கவுள்ளதாக தெரிவித்தார்.

குறித்த சர்ச்சைக்குரிய முறைப்பாட்டை அண்மையில் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார நாடாளுமன்றில் முன்வைத்திருந்த நிலையில், அது தொடர்பில் ஸ்ரீ லங்கா கிரிக்கட் நிறுவனத்தின் தலைவர் சம்மி சில்வா காவல்துறையில் முறைப்பாடளித்திருந்தார்.

இது தொடர்பில், நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டாரவிடம் கறுவாத்தோட்டம் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளனர்.

ஆட்ட நிர்ணய சதி குறித்த முழுமையான விபரங்களை சர்வதேச கிரிக்கட் பேரவையில் முன்வைக்கவுள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கவுள்ளதாக குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *