கடவுச்சீட்டு மோசடி – இந்தியாவில் சிக்கிய இலங்கையர்கள்!

இந்திய கடவுச்சீட்டுகளை பெற்றுக்கொள்வதற்காக போலி ஆவணங்களை சமர்ப்பித்த 5 இலங்கையர்கள் உட்பட 9 பேர் இந்தியாவின் பெங்களூரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள் பெங்களூர் காவல்துறையினால் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கைது செய்யப்பட்ட இலங்கையர்கள் உள்ளிட்ட சந்தேகநபர்கள் பல நாடுகளில் இருந்து விசா பெற்றுக் கொள்வதற்காக போலி ஆவணங்களை சமர்ப்பித்து கடவுச்சீட்டு பெற முயற்சித்துள்ளதாக பெங்களூர் காவல்துறையினர் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *