கொழும்பு, நவ. 11: காலியில் அண்மையில் இடம்பெற்ற பாகிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் போது, ஆட்ட நிர்ணய சதி நடந்ததாகக் கூறி இது தொடர்பாக சர்வதேச கிரிக்கட் பேரவையில் (ஐசிசி) நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார முறைப்பாடளிக்கவுள்ளார்.
இது தொடர்பாக நளின் பண்டார அண்மையில் நாடாளுமன்றில் பேசியிருந்த நிலையில், இது தொடர்பில் ஸ்ரீ லங்கா கிரிக்கட் நிறுவனத்தின் தலைவர் சம்மி சில்வா காவல்துறையில் முறைப்பாடளித்திருந்தார்.
இது தொடர்பில், நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டாரவிடம் கறுவாத்தோட்டம் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளனர்.
இந்நிலையில், ஆட்ட நிர்ணய சதி குறித்த முழுமையான விபரங்களை சர்வதேச கிரிக்கட் பேரவையில் முன்வைக்கவுள்ள முறைப்பாட்டில் தெரிவிக்கவுள்ளதாக குறிப்பிட்டார்.