லேடி சூப்பர்ஸ்டார் என ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர் நடிகை நயன்தாரா. இவர் அண்மையில் தான் இரட்டை குழந்தைகள் பிறந்தது.
மேலும் தற்போது ஜவான், கனெக்ட், இறைவன், நயன்தாரா 75 ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார்.

நடிகை நயன்தாரா ஐயா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார். இதன்பின் ரஜினியுடன் சந்திரமுகி, அஜித்துடன் பில்லா என தொடர்ந்து முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்து முன்னணி நடிகை அந்தஸ்தை பெற்றார்.
இந்நிலையில், நடிகை நயன்தாரா தமிழ் சினிமாவில் நடிக்க வந்த போது அவரை இயக்குனர் பார்த்திபன் தன்னுடைய குடைக்குள் மழை படத்தின் கதாநாயகியாக முதன் முதலில் தேர்த்தெடுத்துள்ளார்.

நயன்தாராவை கதாநாயகியாக தேர்ந்தெடுத்த மறுநாள் தன்னை சந்திக்க வரும்படி பார்த்திபன் கூறியுள்ளார். ஆனால், சொன்ன நேரத்திற்கு நயன்தாராவால் பார்த்திபனை சந்திக்க முடியாமல் போய்விடுகிறது. இதனால் இப்படத்தில் இருந்து நயன்தாராவை தூக்கிவிட்டாராம் பார்த்திபன்.
இதன்பின் தான் இந்த கதாபாத்திரத்தில் மதுமிதா என்ற நடிகையை நடிக்க வைத்தாராம் பார்த்திபன்.