
ஆட்ட நிர்ணய சதி தொடர்பில், நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார சர்வதேச கிரிக்கட் பேரவையில் முறைப்பாடளிக்கவுள்ளார்.
அண்மையில் காலியில் இடம்பெற்ற பாகிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் போது, எதிரணிக்கு சாதகமாக களத்தை பயன்படுத்தியதாக கூறி அவர் இந்த முறைப்பாட்டை வழங்கவுள்ளதாக எமது செய்தி சேவைக்கு தெரிவித்தார்.
குறித்த சர்ச்சைக்குரிய முறைப்பாட்டை அண்மையில் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார நாடாளுமன்றில் முன்வைத்திருந்த நிலையில், அது தொடர்பில் ஸ்ரீ லங்கா கிரிக்கட் நிறுவனத்தின் தலைவர் சம்மி சில்வா காவல்துறையில் முறைப்பாடளித்திருந்தார்.
இது தொடர்பில், நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டாரவிடம் கறுவாத்தோட்டம் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளனர்.
குறித்த, சம்பவம் தொடர்பில், எமது செய்தி சேவை வினவிய போது, ஆட்ட நிர்ணய சதி குறித்த முழுமையான விபரங்களை சர்வதேச கிரிக்கட் பேரவையில் முன்வைக்கவுள்ள முறைப்பாட்டில் தெரிவிக்கவுள்ளதாக குறிப்பிட்டார்.