ஓமானுக்கான இலங்கை தூதரகத்தில் கடமையாற்றும் தொழிலுறவு பிரிவின் அதிகாரியை உடனடியாக நாட்டிற்கு அழைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
வெளிவிவகார அமைச்சினால் குறித்த விடயம் தொடர்பில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொழிலுக்காக ஓமானுக்கு சென்ற பெண் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்தார் என மேற்கொள்ளப்பட்டுள்ள முறைப்பாட்டை தொடர்ந்தே அவர் நாட்டிற்கு அழைக்கப்படவுள்ளார்.
குறித்த குற்றச்சாட்டு தொடர்பில் முதல் கட்ட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.