சட்டக் கல்லூரி மாணவர்கள் ஆங்கில மொழியில் மாத்திரமே நுழைவுப் பரீட்சைக்குத் தோற்ற முடியுமென்ற தீர்மானத்தை, மூன்று வருடங்களுக்கு ஒத்திவைக்கவுள்ளதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச கூறினார்.
இது தொடர்பில் முன்வைக்கப்பட்டு வரும் கருத்துக்களை கவனத்திற் கொண்டே, இத்தீர்மானத்தை மூன்று வருடங்களுக்கு ஒத்திவைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.