கொக்குவில் சந்தை கட்டிடத்தொகுதி திறந்து வைப்பு!(படங்கள் இணைப்பு)

நல்லூர் பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட கொக்குவில் சந்தை வளாகத்தின் சந்தை கட்டிடத்தொகுதி நல்லூர் பிரதேச சபையின் தவிசாளர் பத்மநாதன் மயூரன் தலைமையில் மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணனின் பங்குபற்றுதலுடன் இன்று காலை திறந்து வைக்கப்பட்டது.

உலக வங்கியின் உள்ளூர் அபிவிருத்தி திட்டத்தின் 10.37மில்லியன் மற்றும் நல்லூர் பிரதேச சபையின் 9மில்லியன் பங்களிப்புமாக மொத்தமாக 19.37மில்லியன் ரூபாய் நிதியொதுக்கீட்டில் அமைக்கப்பட்ட கட்டிட தொகுதியின் கல்வெட்டினை நல்லூர் பிரதேச சபையின் தவிசாளர் ப.மயூரன் திரைநீக்கம் செய்துவைத்ததோடு சந்தை கட்டிட வளாகத்தினை யாழ் மாநகர சபை முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் நாடாவெட்டி சம்பிரதாயபூர்வமாக திற்ந்து வைத்தார்.

இதன் பொழுது பிரதம விருந்தினராக யாழ் மாநகர முதல்வர் சட்டத்தரணி  விஸ்வலிங்கம் மணிவண்ணன்,சிறப்பு விருந்தினராக வலி வடக்கு பிரதேச சபையின் செயலாளர் சுதர்ஜன்,கௌரவ விருந்தினராக மாவட்ட பொறியிலாளர் திரு.வே.மேனன் ,வலி தென்மேற்கு பிரதேச சபை தவிசாளர் அ.ஜெபநேசன்,நல்லூர் பிரதேச சபையின் செயலாளர்,யு.ஜெலீபன் சபையின் உறுப்பினர்கள்,உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *