மோசமான நிலையில் மாணவர்கள் – புத்தகங்களின் விலையை குறைக்குமாறு கோரிக்கை!

பாடசாலை புத்தகங்கள் மற்றும் ஏனைய உபகரணங்களின் விலைகள் அதிகரித்துள்ளதால் பாடசாலை மாணவர்கள் அநாதரவாக உள்ளதாக எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவிதார்.

எனவே, பாடசாலை புத்தகங்கள் மற்றும் ஏனைய பொருட்களை இலகுவாக பெற்றுக்கொள்ளும் வகையில் அரசாங்கம் வேலைத்திட்டத்தை ஏற்பாடு செய்ய வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *