இராஜாங்க அமைச்சர் டயானா கமகே வெளிநாடு செல்ல தடை!

சுற்றுலா இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவுக்கு வெளிநாட்டு பயணத்தடையை கொழும்பு பிரதான நீதவான் விதித்துள்ளார்.

இராஜாங்க அமைச்சருக்கு 2022 நவம்பர் 17 வரை பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளது.


 டயானா கமகேவின் கடவுச்சீட்டு, பிறப்புச் சான்றிதழ் மற்றும் தேசிய அடையாள அட்டை (NIC) தொடர்பாக ஒக்டோபர் மாதம் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.

இந்த முறைப்பாடு தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன், தற்போது நடைபெற்று வரும் விசாரணைகள் தொடர்பான உண்மைகளை சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கை இன்று பரிசீலனைக்கு எடுத்துக் கொண்ட கொழும்பு பிரதான நீதவான், இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவுக்கு வெளிநாட்டு பயணத்தடை விதித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *