சஜித்தை கைவிட்ட எம்.பிக்கள் – மகிழ்ச்சியில் ரணில்

நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பலர் அரசாங்கத்துடன் இணைந்து கொள்ளத் தயாராக இருப்பதாக ஜனாதிபதியின் தொழிற்சங்கத்தின் பணிப்பாளர் நாயகம் சமன் ரத்னப்பிரிய தெரிவித்துள்ளார்.
 
இந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் வரவு செலவுத் திட்ட நேரத்தில் அல்லது அதன் பின்னர் அரசாங்கத்துடன் இணைவார்கள் என்றும் அந்த பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான அமைச்சுப் பதவிகளை ஜனாதிபதி தீர்மானிப்பார் என்றும் அவர் கூறினார்.
 
தற்போதைய சூழ்நிலையின் அடிப்படையில் ,பல்வேறு பொறுப்புகளை ஏற்க வேண்டியுள்ளது.  பொருளாதாரம், சுகாதாரம், கல்வி மற்றும் விவசாயம் ஆகிய துறைகளை நிர்வகிக்க வேண்டியுள்ளது.
 
மேலும் ஜனாதிபதி மீது நேர்மறையான எண்ணம் காணப்படுவதாகவும் ராஜித சேனாரத்ன மேலும் தெரிவித்துள்ளார்.பெரும்பாலான மக்கள் ஜனாதிபதியால் ஈர்க்கப்பட்டு அரசாங்கத்தில் இணைந்து கொள்ள விரும்பினாலும் பொறுப்பை வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *