நடு வீதியில் இனி வாகன புகைப் பரிசோதனை

நெடுஞ்சாலையில் அதிக புகையை வெளியேற்றும் வாகனங்களை சோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
 
இவ்வாறு, கொழும்பு – கண்டி வீதியின் கடவட பகுதியில் வீதியில் பயணித்த 65 கார்களை பரிசோதித்த போது கடும் கரும் புகையுடன் கூடிய 20 வாகனங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.
 
அதிக புகையினால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பை தடுக்கவும், அதிக எரிபொருள் எரிப்பதால் பொருளாதாரத்தில் ஏற்படும் பாதிப்பை குறைக்கவும் இந்த ஆய்வின் நோக்கம் என காற்று மாசுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
 
அவ்வாறான வாகனங்களை மீளமைக்க தற்போது அறிவுறுத்தல்கள் வழங்கப்படுவதாகவும், எதிர்காலத்தில் உரிய முறையில் பழுதுபார்க்கப்படாத வாகனங்களுக்கு தடை உத்தரவு பிறப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *