கொரோனா காலத்தில் குறைக்கப்பட்ட கிருமிநாசினி திரவ உற்பத்திக்காக பயன்படுத்தப்படும் எத்தனால் மீதான இறக்குமதி வரியை நீக்கி வழமையான நிலைக்கு உயர்த்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் 1.6 பில்லியன் ரூபா வரி வருமானம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக அமைச்சர் அறிவித்துள்ளார்.