
பிரதமர் ஆற்றவுள்ள 2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட உரையை முன்னிட்டு முன்னைய வருடங்களைப் போன்று விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் அமுல்படுத்தப்படும் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சர் என்ற வகையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாளை திங்கட்கிழமை பிற்பகல் 1.30 மணிக்கு வரவு செலவுத் திட்ட உரையை ஆற்றவுள்ளார்.
இதனை முன்னிட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களின் அறைகள் உட்பட நாடாளுமன்ற கட்டட தொகுதி முழுவதும் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட அதேவேளை நாளையதினம் பார்வையாளர் கூடம் தூதரக அதிகாரிகள் மட்டுமே திறக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அன்றைய தினம் அப்பகுதியில் உள்ள போக்குவரத்து பொலிஸாராலும் அருகிலுள்ள பொலிஸ் நிலையங்களாலும் விசேட போக்குவரத்து ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.