போலி நாடாளுமன்ற உறுப்பினரின் பெயரில் மோசடி

திருகோணமலை,நவ 13

நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் ஊழியர்களாகக் காட்டி மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறப்படும் மூன்று பேர் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு நாடாளுமன்ற படைக்கல சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ பொலிஸ் மா அதிபரின் உதவியை நாடியுள்ளார்.

சந்தேகநபர்கள் மூவரும் திருகோணமலை தேர்தல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு வேலை செய்வதாக கூறி அடையாள அட்டைகளை தயாரித்துள்ளனர். அந்த எம்.பியின் பெயர் டி.எம். ஷெரீப் என குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் அத்தகைய எம்.பி. ஒருவர் இல்லை.

மூன்று பேரும் தங்களை ஒருங்கிணைப்பாளர், ஒருங்கிணைப்பு செயலாளர் மற்றும் தனிப்பட்ட தொடர்பு அதிகாரியாக குறிப்பிட்டுள்ளனர்.
இவர்கள் கொரியாவிற்கு வேலைக்கு ஆட்களை அனுப்பும் மோசடியில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *