அதிகாரத்தில் உள்ளவர்களின் அலட்சியம்: பொலிஸாரின் அடாவடி தொடர்கின்றது – சாலிய பீரிஸ்

அதிகாரத்தில் உள்ளவர்களின் அலட்சியம் காரணமாக பொலிஸாரின் அடாவடிகள் தொடர்கின்றன என இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் சாலிய பீரிஸ் குற்றம் சாட்டியுள்ளார்.

பதாகைகளை வைத்திருந்த பெண்களை துன்புறுத்தியது, பெண் பொஸிஸ் உத்தியோகஸ்தரின் கழுத்தில் கை வைத்து அழுத்தியமை போன்ற சம்பவங்கள் நேற்று இடம்பெற்றன.

இதனை மேற்கோளிட்டு கருத்து வெளியிட்டுள்ள சாலிய பீரிஸ், இது அதிகாரத்தில் உள்ளவர்களின் தோல்வியை எடுத்துக்காட்டுவதாக குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும் அரசாங்கத்தின் மெத்தனப்போக்கினால் பொலிஸாரின் ஈவிரக்கமற்ற தன்மைகள் தொடர்கின்றன என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *