அனைத்து தமிழ் நெஞ்சங்களுக்கும் நன்றி – நளினி

32 ஆண்டுகள் ஆனாலும், தமது விடுதலைக்கு உதவிய அனைத்து தமிழ் நெஞ்சங்களுக்கும் நளினி நன்றி தெரிவித்துள்ளார்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறைத் தண்டனை அனுபவித்து வரும் நளினி, ரவிச்சந்திரன், முருகன், சாந்தன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகிய 6 பேரும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் சிறையிலிருந்து வெளியேறி ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட நளினி, தன்னை விமர்சித்தவர்களின் கருத்தையும் ஏற்று அதனை உள்வாங்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தனது மிகுதி காலத்தை கணவர், குழந்தை என வாழப்போவதாகவும் இங்கிலாந்தில் தனது மகளை காண செல்லவுள்ளதாகவும் கூறியுள்ளார்.

ராஜீவ் காந்தி படுகொலையில் உயிரிழந்தவர்களுக்கு தனது அனுதாபங்களை தெரிவித்த நளினி, சோனியா காந்தியையோ, ப்ரியங்கா காந்தியையோ சந்திக்க வாய்ப்பு இல்லை என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *