நாடு முழுவதும் மாணவர்களின் பாடசாலை வருகை குறைவு: பேராசிரியர் வசந்த அத்துகோரல

கொழும்பு,நவ 13

இலங்கையில் 10 – 15 வீதமான பாடசாலை மாணவர்கள், உணவுப் பற்றாக்குறை போன்ற மூன்று முக்கிய காரணங்களினால் பாடசாலைக்குச் செல்வதற்குத் தயங்குவதாக கணக்கெடுப்பு ஒன்றில் தெரியவந்துள்ளது.

பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளிவிபரவியல் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரல தெரிவித்துள்ளார். நாடு முழுவதிலும் உள்ள 350 பாடசாலைகளை சேர்ந்த 370 ஆசிரியர்களைப் பயன்படுத்தி நடத்தப்பட்ட ஆய்வில் இந்த நிலை தெரியவந்துள்ளதாக பேராசிரியர் தெரிவித்துள்ளார்.

மாணவர்கள் பாடசாலைக்கு செல்லத் தயங்குவதற்கான முதல் காரணம் போக்குவரத்தில் உள்ள சிரமம் என கண்டறியப்பட்டுள்ளது. இரண்டாவது போதுமான உணவு இல்லாத பற்றாக்குறை. மாணவர்கள் பாடசாலைக்கு செல்லத் தயங்குவதற்கு மூன்றாவது காரணம், பாடசாலை உபகரணங்களை வாங்க முடியாதது என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளதாக பேராசிரியர் தெரிவித்துள்ளார்.

மாணவர்கள் கறறலுக்காக மாத்திரம் பாடசாலைக்கு வந்தாலும் வெளிகள இணைப்பட செயற்பாடுகளில் பங்குபற்றுவதில் தெளிவான குறைபாடு காணப்படுவதாக இந்த ஆய்வில் தெரியவந்துள்ளதாக பேராசிரியர் வசந்த அத்துகோரள மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *