மன்னாரில் கோர விபத்து – ஒருவர் பலி!

மன்னாரில் பட்டா ரக வாகனம் விபத்துக்குள்ளாகியதில் ஒருவர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மன்னார் – மதவாச்சி பிரதான வீதியில் இன்று காலை 9 மணியளவில் இசைமாலைதாழ்வு பகுதியிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

மன்னார் நோக்கி சென்றுகொண்டிருந்த குறித்த பட்டா ரக வாகனம் கட்டுப்பாட்டை இழந்து இவ்வாறு விபத்துக்குள்ளாகியநிலையில் சாரதிக்கு அருகில் இருந்து பயணித்தவர் பலியாகியுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் வாகனத்தை செலுத்தி சென்ற சாரதிக்கு காயங்கள் எதுவும் ஏற்படவில்லையெனவும், அவர் மயக்க நிலையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *